Thursday, 19 March 2026

தொலைத்தொடர்பின் வரலாறு -நாம் தமிழர் களஞ்சியம்

 குகைக் குறியீடுகளைப் பயன்படுத்திய பொழுதே உலகின் முதல் தொலைத் தொடர்பு தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இதன்படி குறியீடுகளை ஓரிடத்திலிருந்து வெகு தொலைவிற்கு, ஒரு தகவலைச் சொல்லும் விதமாகப் பயன்படுத்தியதே தொடர் பாடல் மேலும் தொலைத் தொடர்பின் தோற்றத்தைக் குறிப்பதாக அமைந்தது. ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் அமெரிக்காவிலும் தகவல் தெரிவிக்கும் ஒரு ஊடகமாக முரசு பயன்பட்டது. இதன் தொடர்ச்சியாக கி.பி.1790இல் ஐரோப்பாவில் விளக்கக் கைகாட்டி மரம் நிறுவப்பட்டு முதல் தொலைத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. கி.பி.1830இல் மின்னணுவால் ஆன தொலைத் தொடர்பு முறை நிறுவப்பட்டது.

தொலைத்தொடர்பு முறையின் காலக்கோடு

 கீழக்காணும் அட்டவணை மூலம் வரலாற்றுக் காலம் தொடங்கி, இன்றுவரைத் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட சில ஊடக முறைகளை விளங்கிக் கொள்ளலாம்.

முறை வரலாற்றில் முதன்முறையாக பயன்படுத்திய நாடு காலம் இறுதியாக பயன்படுத்திய பகுதி காலம்
புறாக்கள் மூலம் தூது அனுப்புதல் எகிப்து கிமு.2900 கலிபோர்னியா கிமு.1981
மனிதர்கள் ஓட்டமாக செல்லுதல் எகிப்து கிமு.1928 போனி எக்ஸ்பிரஸ் கிமு.1860
விளக்குகள், பந்தங்கள் ட்ரோய் கிமு.1184 இங்கிலாந்து கிமு.1588
சமிக்ஞைக் கம்பங்கள் பெர்ஷியா கிமு.400 ஜெர்மனி கிமு.1796
ஹீலியோ கிராப்கள் கிரேக்கம் கிமு.400 அரிசோனா கிமு.1886
கொடிகள் கிரேக்கம் கிமு.400 கடல் பயணங்களில் இன்றும் பயன்படுகிறது. இன்று வரை தொடர்கிறது

தொலைத்தொடர்பு முறைகள் : 

1) எழுத்து உருவாக்கமும் பதிவுகள் தொடங்கிய காலமும் 

காலம் எடுத்து உருவாக்கம்
கி.மு.3000 காகிதக் கூழ் உற்பத்தி
கி.மு.59 கணினிகள் முதலாவது செய்தித்தாள் ஜூலியஸ் சீசரால் நிறுவப்பட்ட ஆக்ரா டையூரனா
கி.பி.100 காகிதம்
கி.பி.1000 பேனா,முதலாவது சீன ஆட்சி இயந்திரம்
கி.பி.1400 முதலாவது ஐரோப்பிய ஆட்சி இயந்திரம் (ஜோகன்ஸ் கூப்பன்பெர்க்)
கி.பி.1500 பென்சில்கள்
கி.பி.1800 கள் டைப்ரைட்டர்
கி.பி.1960 கள் கணினிகள்
தொலைதூரத் தொடர்புகள் : 
ஆப்டிகல்ஸ் சிக்னல்கள் அல்லது ஆப்டிகல் தந்தி

தகவல் தொடர்பும் சமூகமும் ஊடகத்தில் எவ்வாறு பங்களிக்கிறது? நாம் தமிழர் களஞ்சியம்

ஒரு சமூகத்தில் ஊடகங்களுக்குரிய பொறுப்புகளை ஆராய்வது அவசியமாகிறது. ஊடக அவ்வகையில் விளைவுகள் குறித்த கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சியில், தொடக்கத்தில் ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை என்றும், நேயர்கள் செயலற்றுக் கொடுக்கப்பட்டதை ஏற்பவர்கள் என்றும் நம்பப்பட்டு வந்தது. ஊடகங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக் களமாகவே இயங்குமாறு யோசனை தெரிவித்தார் ஹேபர்மாஸ்.

இதை சூது வாது அற்றதென்றும், புனைவியல் சார்ந்தது என்றும் விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினர். நேயர் கல்வி, இனம், பால், சமயம் ஆகிய காரணித் தொகுதிகளாலும், குடும்பம், நண்பர் குழாம் உள்ளிட்ட மாற்று விவாதக் களங்களாலும், பன்முக ஊடகங்களைப் பொறுத்து அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் தீர்மாளிக்கப் படுகின்றன என்று தற்போது நம்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்தப் பிரிவு தகவல் தொடர்புக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றிச் சுருக்கமாக உங்களுக்கு விளக்குகிறது.

ஊடக விளைவுகள் குறித்த கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சி

ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை என்றும் நேயர்கள் செயலற்றுக் கொடுக்கப்பட்டதை ஏற்பவர்கள் என்றும் தொடக்ககாலத்தில் நம்பப்பட்டு வந்தது. பின்னர் வந்த ஜோசப் க்ளாப்பர், காட்ஸ், லாசர்ஸ்பெல்ட் முதலான தகவல் தொடர்பியல் அறிஞர்கள், ஊடகங்கள் வலுப்படுத்தும் பணியைச் செய்கின்றனவே அன்றி, மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்று அறிவித்தனர்.

அடுத்தகட்ட நகர்வாகப் பண்பாட்டு ஆய்வுகளை நடத்திய நியோ மார்க்சிஸ்ட்டுகள், ஆளும் அதிகார வர்க்கத்தினாலும், முதலாளிகளாலும், கருத்தியல் செல்வாக்கைப் பெற ஊடகங்கள் வலுவான காரணிகளாகக் கருதப்படுவதாகவும், பாரிய விளைவுகளுக்கு அவையே பொறுப்பு என்றும் அறிவித்தனர். அரசியல்சார் பொருளாதார நோக்கில் ஊடகங்களை அணுகியவர்கள், ஊடகங்களை அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் அங்கமாகக் கருதினர். முதலாளித்துவம் மற்றும் வலுவான நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவும் ஊடகங்கள் கருதப்பட்டன. தவிர ஊடகங்கள் வலுவான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கருதப்பட்டது.

பின்னர், இனப்பரப்பு விளக்கவியல் திருப்பம் அறிமுகமானபோது, நேயர்கள் பிரதியைச் செயலூக்கமுடன் சுட்டியுரைப்பவர்கள் என்றும் கருதப்பட்டது. இதையடுத்து, கவனக்குவிப்பு நேயர்கள் பக்கம் திரும்பியது. இதன் காரணமாக ஊடகங்கள் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாக உணரப்பட்டது.

ஊடகங்கள் என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக்களமாகவே இயங்குகின்றன என யோசனை தெரிவித்தார் ஹேபர்மாஸ். இதைச் சூது வாது அற்றதென்றும், புனைவியல் சார்ந்தது என்றும் விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினர்.

இவை யாவற்றிற்கும் அப்பால் இன்று, ஊடகங்களின் தாக்கமானது நேயர் கல்வி. இனம், பால், சமயம் முதலான காரணித் தொகுதிகளாலும், குடும்பம், நண்பர் குழாம் உள்ளிட்ட மாற்று விவாதக் களங்களாலும், பன்முக ஊடகங்களைப் பொறுத்தும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் தீர்மானிக்கப் படுகின்றன என்ற முடிவிற்கு தகவல் தொடர்பு அறிஞர்கள் வந்துள்ளனர். கீழே சில ஊடக விளைவுக் கோட்பாடுகளைக் காண்போம்.

1. நேரடி விளைவுகள்

ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை. நேயர்கள் செயலற்றுக் கொடுக்கப்பட்டதை ஏற்பவர்கள்.

2. குறைந்த அளவிலான, அல்லது வரையறுக்கப்பட்ட விளைவுக் கோட்பாடு


ஜோசப் களாப்பர், காட்ஸ், லாசர்ஸ்பெல்ட் ஆகியோர் ஊடகங்கள் வலுப்படுத்தும் பணியைச் செய்கின்றனவே அன்றி, மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

3. பண்பாட்டு அய்வுகள் - நியோ மார்க்சிஸ்ட்

ஆளும் அதிகாரவர்க்கத்தினாலும், முதலாளிகளாலும், கருத்தியல் செல்வாக்குகைப் பெற ஊடகங்கள் வலுவான காரணிகளாகக் கருதப்படுதல்; பாரிய விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல்.

4. அரசியல் சார் பொருளாதாரம்

ஊடகங்கள் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் அங்கமாகக் கருதப் பட்டன. மேலும் முதலாளித்துவம் மற்றும் வலுவான நிறுவனங்களின் பிரதிநிதிகளாக ஊடகங்கள் ககுதப்பட்டதுடன் இவை வலுவான வினைவுகளை ஏற்படுத்துவதாகவும் கருதப்பட்டன.

5. அரசியல் சார் பொருளாதாரம் - பொதுக்களக் கோட்பாடு

பண்பாட்டு ஆய்வுகள் - புதிய நேயர் ஆய்வுகள் : இனப்பரப்பு விளக்கவியல் திருப்பம் அறிமுகமானபோது, நேயர்கள் பிரதியைச் செயலூக்கமுடன் சுட்டியுரைப்பவர்கள் என்றும் கருதப்பட்டது. இதனால் கவனக் குவிப்பு நேயர்கள் பக்கம் திரும்பியது. மேலும் ஊடகங்கள் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாக உணரப்பட்டது.

ஊடகங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக் களமாகவே இயங்குமாறு யோசனை தெரிவித்தார் ஹேபர்மாஸ். இதைச் சூது வாதமற்றதென்றும், புனைவியல் சார்ந்தது என்றும் விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினர்.

6.கருத்துகளின் கலவை / ஒருங்கிணைந்த கோட்பாடு

நேயர் கல்வி, இனம், பால், சமயம் ஆகிய காரணித் தொகுதிகளாலும், குடும்பம், நண்பர் குழாம் உள்ளிட்ட மாற்று விவாதக் களங்களாலும், பன்முக ஊடகங்களைப் பொறுத்து அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் நீர்மானிக்கப்படுகின்றன.

பண்பாட்டுத் தொழில்நுட்பங்களுக்கும் நாகரிகத்திற்கும் இடையிலான உறவுகள்

உலக வரலாறு. பண்பாட்டுத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையிலான நாகரிக வளர்ச்சியைப் பின்பற்றுகிறது. இப்பின்னணியில் தொழில் நுட்பத்தின் ஒவ்வொரு காலப்பாங்கும் பொது அனுபவத்திற்கு ஒரு வித பண்பை வழங்குவதுடன். வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன்பொருட்டு மார்ஷல் மெக்லூஹன் ஊடகமே செய்தி என்றார்.

  • முதலாம் நாகரீகம் வரிவடிவ எழுத்தின் தோற்றத்துடன் ஆரம்பமாகிறது.
  • இரண்டாம் நாகரிகம் நெடுங்கணக்கு எழுத்து முறையுடன் தொடங்குகிறது.
  • மூன்றாம் நாகரிகம் ஐரோப்பாவில் அச்சின் அறிமுகத்துடன் இணைந்தே தொடங்குகிறது.
  • நான்காம் நாகரிகம் மின்னணு தொடர்பாடலின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது. 
  • ஐந்தாம் கட்ட நாகரிகம் கணினிகளின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது.
சமூகமும் தகவல் தொடர்புக் கருவிகளும்

தகவலை அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையில் தொழிற்படும் தகவல் தொடர்பு சாதனங்கள் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்றழைக்கப்படுகின்றன. நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப் படங்கள், குறுந்தகடுகள், இணையம் போன்றவை மக்கள் தொடர்பு ஊடகங்களாகக் கருதப்படுகின்றன.

ஊடகங்கள் ஒரு நிலப்பரப்பின் பெருவாரியான மக்களைச் சென்றடையவும், சில வேளைகளில் உலகளாவிய அளவில் மக்களைச் சென்றடையவும் உரிய ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. மேலும் இடைவிடாது ஊடகங்களின் பிடியில் சிக்குண்டிருப்பது நவீன வாழ்வின் இன்றியமையாத பண்புகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இவற்றில் பெருமளவு கவனத்தை ஈர்க்கும் கருவியாகத் தொலைக்காட்சி விளங்குவதால், நவீன சமூக மயமாக்கும் கருவியாகவும் தொலைக்காட்சி விளங்குகிறது.

நவீன வாழ்வுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள தொலைக்காட்சி, வெகுஜன ஆர்வத்தை ஈர்க்கும் கருவியாக விளங்குகிறது. குறிப்பாக நமது அன்றாடச் சமூகச் சிக்கல்கள் குறித்த விவாதங்களையும் அது எழுப்பத் தவறுவதில்லை.காட்டாக.

ஊடகங்கள் நடுநிலையுடன் செய்திகளை வழங்குகின்றனவா?

* தொலைக்காட்சிகளில் வன்முறையையும் பாலியல் உணர்வுகளையும் தூண்டும் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றனவா?

தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்படுபவை பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவையா?

இணையத்தில் அணுகத்தக்க தகவல்களுக்கு நெறிப்படுத்தல் தேவையா?

நமது விழுமியங்களைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றனவா?

குழந்தைகளைப் பாதிக்கும் வகையில் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புகள் அமைகின்றனவா?

ஊடகங்களுக்கென்று வெளிவிவகாரக் கொள்கை என்ற ஒன்று உள்ளதா?

. சிறுபான்மையினர் குறித்த செய்திகளைக் கையாள்வதில் கூருணர்வுடன் இயங்குகின்றனவா? ஊடகங்கள்

செய்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களின் பெயர்களை அறிக்கைகளில் இடம்பெறச் செய்வது ஊடகங்களுக்கு அவசியமான ஒன்றா?

சிகரெட், புகையிலை, மது தொடர்பான விளம்பரங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமா?
குற்றச் செய்திகளை வெளியிடும்போது, அதில் இடம்பெறும் விவரணைகள், பொதுமக்களிடம் அச்ச உனார்வை ஏற்படுத்துவதை அனுமதிக்கலாமா?

ஊடகங்கள், அரசியல் பரப்புரைகளை அறிக்கையிடும்போது, பக்கச் சார்பற்று வெளியிடுகின்றனவா?

விளம்பரங்களை வெளியிடும்போது அறநெறிகள் சுவனத்தில் கொள்ளப் படுகின்றனவா?

ஊடகங்களின் உரிமை சில முதலாளிகளிடம் மட்டும் சிக்கிக்கொள்ளும் போது, ஊடகங்களின் உள்ளடக்கம் சிதைக்கப்படுகிறதா?

முதலான மேற்கண்ட வினாக்களுக்கு விடை தெரிய வேண்டுமானால், நாம் இன்றைய நவீன சமூகத்தில் ஊடகங்களின் பங்கிளையும், அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஊடகங்களுக்கும் சமூகத்திற்குமான உறவு எத்தகையது? சமூகவியல் நோக்கில் ஊடகங்கள் நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் (நுண்ணிய அளவிலும்), பொருளாதாரம், அரசியல், சமயம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகிய சமூகத்தின் பெரும் சக்திகளுக்கிடையில் ஊடகங்களின் பங்கு குறித்த விரிவான நிலையிலும் இதை நாம் அணுக வேண்டியுள்ளது.

2.4 தகவல் தொடர்பு எனும் குருட்டு மகிழ்ச்சி

மூலம் ழா(ன்) பொத்ரியார் சிந்தனைகளை ஆழமான ஒரு தத்துவச் சொல்லாடல் பிரதிபலிக்கும் 'தகவல் தொடர்பு எனும் குருட்டு மகிழ்ச்சி' என்ற கட்டுரையை ஆங்கிலம் வழியாகக் க பஞ்சாங்கம் மொழிபெயர்த்துள்ளார். அதிலிருந்து ஒரு பகுதியைக் காண்போம்.

புகழ்பெற்ற ஒரு ஜப்பான் நாட்டுக் கார், ஊடங்களோடு பேசுகிறது; நீங்கள் ஆணையிடாமலேயே தானாகவே உங்களுடைய பொதுவான மனநிலையையும், பொதுவான பண்பினையும் அந்த நேரத்து நிலையினையும் உங்களுக்கு இயற்கையாய் எடுத்துரைக்கிறது, மேலும் நீங்கள் முறையாகச் செயல்படா விட்டால், உங்களுக்காகச் செயல்படவும் அது மறுத்துவிடுகிறது.

பொதுவான உங்கள் வாழ்க்கை நடைமுறையோடு உடன்படிக்கை செய்துகொண்டு. உங்கள் பங்காளியாகவும் ஆலோசகராகவும் உங்கள் கார் உங்களோடு வினைபுரியத் தொடங்கிவிடுகிறது.

இப்படி உங்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதபடி உருவாக்கப் பட்டுள்ள ஒரு காரோடு நீங்கள் இணைக்கப்பட்டுவிடுகிறீர்கள். இந்நிலையில் இந்தக் காரோடு எவ்வாறு தொடர்பு வைத்துக் கொள்வது என்பதே அடிப்படைப் பிரச்சனையாகி விடுகிறது.

இவ்வாறு தன்னுடைய சொந்தப் பொருளோடு கொள்ளுகிற ஒயாத தேர்வு நிலையே உங்களுடைய வாழ்வாகிவிடுகிறது. இந்தக் கோணத்தில் பார்க்கும்பொழுது வேகமோ அல்லது இடம்பெயர்தலோ, தனி மனிதரோ அல்லது போட்டிகளோ, பெருமைகளோ இப்பொழுது ஒரு பொருட்டல்ல. மாறாகச் சில காலத்திற்கு முன்புவரை கார் என்பது அதன் வேகத்தோடு இணைத்துப் பார்க்கப்பட்டது. எனவே, நான் அதிகம் ஓட்டுகிறேன், ஆனால் கொஞ்சம்தான் நுகர்கிறேன் என்ற நிலைதான் நேற்று வரை நிலவியது.

ஆனால் இன்று உலகமயமாகிவிட்ட நிர்வாசு அமைப்பினால், கார் உட்பட நம்மைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக வடிவமைக்கப்படுகின்றன. இந்தக் கருவிகள் தனி மனிதரின் பிடிமானத்திற்குள் அகப்படாத, தனக்கேயான சுழற்சி மாடத்தை வடிவமைத்துக் கொள்ளுகின்றன. மேலும் தங்களுக்கேயான அரங்க ஒப்பனைகளைக் காப்பாற்றிக் கொள்ளுகின்றன. அங்கே ஒவ்வொன்றும் தொடர்ந்து தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு தங்களைத் தொடர்பெல்லைக்குள் நிலைநிறுத்திக் கொள்கின்றன. இதன் வழியாக, மற்றவைகளின் நிலை என்ன? ஒட்டுமொத் தமானவற்றின் நிலை என்ன? முதலியவற்றைத் தெரிவித்துக் கொள்ளுகின்றன. (இந்த இடத்தில் விண்வெளிக் கலத்தின் செயல்பாட்டினை மாணாக்கர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.)

தொலைதூரக் கணிப்பியல்

ஒவ்வொரு தனி மனிதரும் (இன்றைக்கு) தன்னை அடமானப்படுத்திக் கொண்ட ஓர் இயந்திரத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத்தான் உணர்கின்றனர்; குறிப்பாக முழுமை என்பதிலிருந்து தனித்த ஒரு சிறு துண்டு என்ற நிலையில்தான் தங்களை உணர்கின்றனர். மேலும் தாங்கள் தோன்றிய உலகத்திலிருந்து கணக்கிட்டுச் சொல்ல முடியாத ஒரு தூரத்தில் இருப்பதாகத்தான் உணர்கின்றனர்; மீண்டும் தாங்கள் தோன்றிய தாய்ப் பூமிக்குத் திரும்புவதற்காக எடையே அற்ற நிலையில் ஓர் உலோக அடைப்பிற்குள் இருக்கும், வான்வெளிப் பயணி போலத்தான் இங்கே அனைவரும் அக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உலோக அடைப்பிற்குள் இருக்கும் அந்த எடையற்ற மனிதனின் நிலையை யார் துல்லியமாக உரைத்திட முடியும்?

இந்நிலையில் வாழ்தலிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டோம். அறிவியல் புனைகதைகளுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டோம். இவற்றுக்கெல்லாம் காரணம், காலத்தையும் இடத்தையும் அதிகமாக நுண்ணளவில் (கருக்கிக்) காட்டக்கூடிய மின்னணுக் கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்கள்தான். இவற்றுடன் மின்னியக்கம் செல்லும் நெறியும், அதன் ஆற்றலும் அடைந்துள்ள நுண்ணளவுத் தன்மைகள்தான், சுற்றுச்சூழல் கண நேரத்தில் அழிந்துபோகும் நிகழ்வாகும்.

இவைகள் எல்லாம் சேர்ந்து மனிதர்களின் இருப்பைப் பயனற்ற தன்மைக்குள் தள்ளிவிடுகின்றன. மனிதவழக்காறுகளின் அழிவிற்குள் அழ்த்திவிடுகின்றன. கிட்டத்தட்ட மனித வாழ்க்கையை நாற்றமெடுத்து வெறுக்கத் தக்கவைகளாக மாற்றுகின்ற இவைகளால்தான் நமது இன்றைய வாழ்வு நிரப்பப்படுகிறது.

சாதாரணமான ஒரு தொலைக்காட்சிப் பெட்டியினது வருகை, எந்த அளவிற்கு அந்தக் குடியிருப்பின் எஞ்சிய பகுதிகளை மாற்றிவிடுகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான் வெளியேயிருந்து யாரும் உள்ளே போக முடியாத ஒரு மூடிய உறையாக அந்த இடத்தையே மாற்றிவிடுகிறது. மேலும் பயனற்று அழிந்துபோன, இன்றைக்கும் பின்னமுற்றுக் குழப்பமாகக் கிடக்கின்ற மனித உறவுகளின் எச்சங்களாக அவைகள் வெளிப்படுகின்றன. இவ்வாறு மனிதர்களின் நடத்தைகள் அனைத்துமே குறிப்பிட்ட சில திரைக்காட்சிகளாகவும், குறிப்பிட்ட சில எல்லை முனைகளாகவும் சுருக்கப்பட்டு விடுகிற அந்தக் கணத்திலேயே எஞ்சி நிற்கிற உண்மை, ஒன்றுக்கும் பயன்படாத உடம்பு போலத்தான் ஆகிவிடுகின்றது.

இந்த நவீனச் சூழ்நிலையை, நுண்ணளவு (சுருக்கிவிடும்) காலகட்டம் என்றும், தொலைதூரத்திலிருந்து ஆணையிடும் காலகட்டம் என்றும், நம்முடைய மகிழ்ச்சி. உடம்பு, காலம் ஆகிய அனைத்தும் மிக நுட்பமான (சுருக்கமான) முறைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் காலகட்டம் என்றும் நாம் அழைக்கலாம்.

2.5. ஊடகங்களும் சமூகமயமாக்கலும்

தனது சுயத்தை, விரிவான சமூகத் தளத்திற்கு இணைவித்துக் கொள்ள, சமூக விழுமியங்களையும், நம்பிக்கைகளையும், பண்பாட்டின் மரபுகளையும் கற்று உள்வாங்கிக் கொள்ளும் முறையை வளர்த்துக் கொள்வதை சமூக மயமாதல் எனலாம். சமூகமயமாதல் மூலமாக, நாம் சமூகத்தில் ஆற்ற வேண்டிய குடிமகன், காதலி, தோழன். உழைப்பாளி, ஆசிரியை முதலான வாழ்க்கைப் பங்கினைச் சிறப்பாக ஆற்றக் கற்றுக் கொள்கிறோம். இதன் வழியாகப் பண்பாட்டு மரபுகளை உள்வாங்கிக் கொண்டு சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடந்துகொள்ள நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம்.

குடும்பம், பள்ளிக்கூடம் ஆகிய சமூக நிறுவனங்கள் இளையோரைச் சமூகமயமாக்குவதில் வெளிப்படையான பங்கினை ஆற்றுகின்றன. குறிப்பாக நண்பர் குழாம் போன்றவை சமூகமயமாக்கலில் வலுவான பங்கினை ஆற்றுகின்றன.

இப்பின்னணியில், சமூகமயமாக்கலில் ஊடகங்களின் பங்கிளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த சமூகங்களிலும், வளர்முகச் சமூகங்களிலும், ஊடகங்கள் சமூகமயமாக்கலில் முக்கியப் பங்கினை எடுத்துக் கொண்டுள்ளன.

இந்த உலகத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதிலும், நாம் மற்றவர்களுடன் எப்படி உறவாடுகிறோம் என்பதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்கினைச் செலுத்துகின்றன. அவ்வகையில் ஊடகங்கள் சமூக நிறுவனங்களுக்கும் நமக்கும் இடையிலான உறவில் இடையீட்டாளராகச் செயல்படுகின்றன.

நாம் எதை அறிந்து கொண்டிருக்கிறோமோ அதற்கு ஊடகங்களையே சார்ந்திருக்கிறோம். அரசு குறித்த நமது அறிவு, செய்திகளின் அடிப்படையிலேயே அமைகிறதேயன்றி, அனுபவங்களின் அடிப்படையில் அமைவதில்லை அரசியல் விவாதங்கள் குறித்து நிபுணர்களின் பார்வையினூடாக, நாம் நாளேடுகளில் வாசித்தும் தொலைக்காட்சிகளைப் பார்த்தும் புரிந்து கொள்கிறோம்.

அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்க ஊடகங்களையே சார்ந்திருக்கின்றனர். குறிப்பாக ஒளிப்பரப்பாகும் விளையாட்டுகள் முதலானவற்றில் இது போன்ற இயக்க ஆற்றலே நிகழ்கிறது. இவ்வாறு நமது வழக்கமான குடும்ப நிகழ்வுகள், நட்புலக நிகழ்வுகளிலும் ஊடகம் ஒரு அங்கமாகிறது. குறிப்பாகப் பிறருடன் நமது உறவைத் தீர்மானிப்பதில் ஒருங்கிணைக்கும் சக்தியாகவோ, முரணுக்கான மூலமாகவோ விளங்குகிறது. இவ்வாறு ஊடகங்களின் உள்ளடக்கம் அல்லாது, அவற்றின் இயங்கு தன்மை மூலமாகவும், ஊடகங்கள் சமூகத்தின் மீதான விளைவைச் செலுத்துகின்றன.

ஊடகங்கள் பெரும்பாலும் நமது தனி வாழ்க்கைக்கும் பொது உலகிற்குமான இணைப்புப் பாலமாக விளங்குகிறது. நம்மை நாமே ஊடகங்களின் வழியாகப் பார்த்துக் கொள்கிறோம். சமூகத்தில் நமது இடத்தையும் ஊடகங்களின் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.இதனால்தான், சமூகம் எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஊடகங்களின், மீது நமது தனிக் கவனத்தைச் செலுத்த வேண்டிய தேவை எழுகிறது.

ஊடகங்கள் பல்வேறுபட்டதும் முரண்பாடானதுமான பணிகளைச் செய்கின்றன. வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் ஊடகங்கள் தகவல் தரும் கருவியாகவும் பொழுது போக்குக் கருவியாகவும் பயன்படுகிறது. ஊடகப் பணியாளர்களுக்கு வேலை தரும் தொழிலாக விளங்குகிறது. அதன் மூலம் அவர்களுக்கு வருவாய், அந்தஸ்து, தொழில் முறை அடையாளம் ஆகியவற்றைப் பெற்றுத் தருகிறது. ஊடக உரிமையாளர்களுக்கு அது லாபம் ஈட்டித் தருவதாகவும், அரசியல் அதிகாரத்திற்கான மூலமாகவும் விளங்குகிறது. சமூகத்திற்குத் தகவலையும், சமூக விழுமியங்களையும் கடத்தும் கருவியாகவும் விளங்குகிறது.

ஊடகங்கள் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்து கொள்ளக் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை தேட முற்படுங்கள்.

  • ஊடகங்களின் உரிமையாளர்கள் யாவர்? ஊடக உரிமையாளர்கள் குறித்து நாம் என் கவனிக்க வேண்டியிருக்கிறது?
  • எவ்வாறு ஊடகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன?
  • ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசின் பங்கு வேண்டும்? 
  • என்னவாக இருக்க என் சில பிம்பங்களும் கருத்துருக்களும் ஊடகங்களில் அதிக இடங்களை ஆக்கிரமிக்கின்றன?
  •  சிலவற்றை ஊடகங்கள் ஒதுக்குவது என்?
  •  யாருடைய குரல்கள் ஊடகங்களில் ஒலிப்பதில்லை?
  • ஊடகங்களின் வளர்ச்சி எவ்வாறு அரசியல் இயங்குதலில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது?
  • பொதுமக்கள் எவ்வாறு ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்? எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்கள்?
  • தொழில்நுட்ப மாற்றங்கள் எவ்வாறு ஊடகங்களைப் பாதிக்கின்றன?
  • ஊடகங்கள் உலகமயமாகி வருவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

2.6 ஊடகங்களின் பரபரப்பூட்டும் தன்மை

24 மணிநேரச் செய்திச் சேவைத் தொலைக் காட்சிகளின் வருகைக்குப் பின் ஊடக உலகில் பரபரப்புக்குக் குறைவே இல்லை என்றால் அது மிகை இல்லை ஊடகங்களின் பரபரப்பூட்டும் தன்மை குறித்த ஒரு ஆய்வைக் கவனியுங்கள்.

  • வில்லியம் ஜெபர்சன் கிளின்டன் என்ற அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை நினைவுபடுத்திச் சொல்லுங்கள் என்றால், உங்கள் மனதில் உடனடியாகத் தோன்றுவது என்ன? 
  • கல்வி குறித்து அவர் வகுத்துக் கொண்ட கொள்கைகளா? 
  • அவரது ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளா? 
  • அல்லது வெள்ளை மாளிகையில் உள்ளகப் பயிற்சி பெற்று வந்த மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இருந்ததாகக் கூறப்பட்ட உறவு நிலையா?

துரதிர்ஷ்டவசமாக, மோனிகா உறவு குறித்த தகவல்கள்தான் நமது நினைவில் இருந்து ஊடகங்களின் பரபரப்பூட்டும் உடனடியாக வெளிப்படுகின்றன. இதற்கு தன்மையையே முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பரபரப்பூட்டும் தன்மை மூலம் ஊடகங்கள் அரசு குறித்தும் அரசின் கொள்கைகள் குறித்துமான விவாதங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி,வாழ்வு முறை, பிரபலங்கள், பொழுதுபோக்கு, குற்றவியல், பாலுணர்வைத் தூண்டும் நிகழ்வுகள் முதலானவற்றில் கவனக் குவிப்பை நிகழ்த்துகின்றன. 

மேலும் வெகுசனங்களைப் பாதிக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பிரச்னைகள் இந்தப் பரபரப்புகளினால் பின்னுக்குத் தள்ளப்பட்டு கவனத்தை ஈர்க்க இயலாது போகின்றன.

நாம் தகவல் பெறும் மூலத்தைப் பொறுத்து சமூகம் குறித்த நமது பார்வையின் தன்மை மாறுபடும். முன்னுரிமைத் தரப்பட வேண்டியிராத தகவல்களை முன்னுரிமைப்படுத்தும் போது, அத்யாவசியமான தகவல்கள் பின்னுக்குத் தள்ளப் படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. 

இதனால், மக்களை அதிகம் பாதிக்கும் விசயங்கள் விவாதத்திற்கு வராமல் போகும் சூழல் ஏற்படுகிறது. இது மக்கள் கருத்துருவாக்கத்திற்கு இடையூறாகவும், அதனால், உரிய கொள்கைகள் முறையாக வகுக்கப்பட இயலாத சூழலும் உருவாகிவிடுகிறது.

1996 அமெரிக்க ஜனாதிபதி பொதுத் தேர்தல்கள் முடிந்தவுடன், பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விவாதங்கள் தொடங்கின. நிதியைப் பெருக்குவதற்காக சட்டங்கள் வளைக்கப்பட்டதும், பல சட்ட விரோத நிகழ்வுகள் அரங்கேறி யிருப்பதும் தெரிய வந்தது. அதே வேளையில் தான் மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் பெரிய அளவில் ஊடகங்களால் விவாதிக்கப்பட்டதால், பொதுத் தேர்தலின்போது சட்ட விரோதமாக நடந்த நிகழ்வுகள் குறித்த செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

அமெரிக்காவில் இவ்வாறான சூழல் நிலவ என்ன காரணம்? பெரு வணிக நிறுவனங்களின் வணிக நோக்கம் ஒரு காரணம் என்று வாதிடப்படுகிறது. 'கார்ப்பொரேட் ஒனர்ஷிப் தியரி் என்று இதை அழைக்கிறார்கள். ஜெனெரல் எலக்ட்ரிக்கல், டைம் வார்னர், வால்ட் டிஸ்னி போன்ற பெரும் வணிக நிறுவனங்கள் தாம், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த டெலிவிஷன் நெட்வொர்க்குகளைத் தம் கைவசம் வைத்துள்ளன.

மேற்கண்ட வணிக நிறூவனங்களின் முதலாளிகள் இடும் கட்டனைக்கு ஏற்பவே இந்தச் செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் செய்திகளை உருவாக்கு கிறார்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் தமது வணிகத்தைப் பாதிக்கும் செய்திகளை வெளியிடாமல் பார்த்துக் கொள்வதே அந்த நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் உத்திகளுள் ஒன்றாகிவிடுகிறது.

இங்குதான் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடும் தேவை எழுகிறது. பாலுணர்வுச் செய்திகள், சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகள், பிரபலங்களின் அந்தரங்கம் குறித்த செய்திகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, மக்களாட்சியில் வெகுஜனக் கருத்துருவாக்கம் செய்யப்பட வேண்டியவறைப் பின்னுக்குத் தள்ளுவதும் இந்த உத்தியில் அடங்கும். 

கென் சேன்ஸ் என்ற ஆய்வாளர், 'செய்தி ஊடகங்கள் முக்கியமான உண்மைகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள்' என்ற கட்டுரையில் இது குறித்து விரிவாக விளக்குகிறார்.

Tuesday, 13 January 2026

பழமொழி, விடுகதைகள் மூலம் வாய்மொழி இலக்கியம் | நாம் தமிழர் களஞ்சியம்

வாய்மொழி இலக்கியத்தில் காணப்படும் மற்றொரு வகை பழமொழி, விடுகதை ஆகியவை ஆகும். உலக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த வகைகள் காணப்படுகின்றன. இவை உரைநடையில் அமைந்த வடிவங்கள். 

ஒரு கருத்தைச் சொல்லுவது இவற்றின் நோக்கமாகும். இரண்டும் மனித இனத்தின் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் தோன்றிய இலக்கிய வகைகளாகும். பழமொழி பெரும்பாலும் ஒரு வாக்கியத்தில் அமையும். செறிவும், சுருக்கமும் இதன் அடிப்படைப் பண்புகள். நீதி சொல்லுவது இதன் நோக்கம்.

பழமொழி:

பழமொழி தாம் பெற்ற அனுபவத்தைக் கேட்பவருக்குச் சொல்லி, அவருக்கு வழிகாட்டுவதற்காக அமைந்த அனுபவமொழி தொல்காப்பியத்தில் மூதுரை என்ற பெயரில் இது இடம் பெறுகிறது. எனவே. அதற்கு முன்னரே வாய்மொழி மரபில் பழமொழி இடம் பெற்றிருந்தது என அறியலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி என்ற பெயரிலே ஒரு நூல் உள்ளது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருக்கும். மேலும் அநேகமாக எழுத்திலக்கியங்கள் அனைத்திலும் பழமொழி இடையிடையே காணப்படுகிறது.

 (கேட்பவருக்கு நீதி சொல்லுவது இதன் அடிப்படை நோக்கம் என்று முன்னர்ப் பார்த்தோம். பிற்காலத்தில் ஒளவையார், பாரதியார் போன்றோர் பாடிய ஆத்திசூடி இதன் மற்றொரு வடிவம் என்று கூறலாம்.

விடுகதை: புதிர்

விடுகதை ஒரு கேள்வியை எழுப்பி அதற்குப் பதில் சொல்லுவது போல அமைந்திருக்கும். ஒருவகையில் இது உரையாடல், வினாவிடை என்றும் இதைக் கூறலாம். புதிர் என்றும் அழிப்பான் கதை என்றும் இது கூறப்படுகிறது. வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறுவது இதன் நோக்கமாகும். பழமொழி போல நேரடியாக ஒரு தொடராக அமையாமல், கேள்வியும் பதிலுமாக இது இருக்கும். கேள்வி வடிவில் விடுவிக்க முடியாதபடி முதல் பகுதி அமைந்திருக்கும். அதைக் கேள்வி கேட்பவர் எழுப்புவார். இதற்கு விடுகதை போடுதல் என்று பெயர்.

 எதிரிலிருப்பவர் இந்தக் கேள்வியை நன்கு யோசித்துப் பதில் கூற வேண்டும். தெரியாவிட்டால், கேள்வி கேட்பவரே பதில் கூறி எதிராளியை வியப்பில் ஆழ்த்துவார். ஒருவகையில் மனிதனின் அறிவுக் கூர்மையைச் சோதிப்பதற்காக விடுகதை போடப்படுகிறது என்று கொள்ளலாம். கிராமப்புறங்களில் பொழுது போக்கை மையமிட்டு இது உருவாகி இருக்கும். விடை கூற முடியாத வினாவை எழுப்பி, கேட்பவரைச் சிந்திக்கவைத்து, விடை கூறச் செய்வது இதன் நோக்கமாகும்.

பழமொழி, விடுகதைகளின் வகைகள்

பழமொழி, விடுகதை இரண்டும் வாய்மொழி இலக்கிய வகைகள், எனவே வாய்மொழி இலக்கிய மரபிற்கேற்ப, வட்டாரப் பண்பிற்கும், சாதி வேறுபாடுகளுக்கும் ஏற்ப இவை அமையும், எனவே இவைகளைத் தொகுத்து ஆராய்பவர்கள், வட்டாரம், சாதி அடிப்படையில் இவற்றை வகைசெய்தனர். அதற்கடுத்த நிலையில் தொழில், சமயம், கலை, பழக்க வழக்கங்கள் என்ற பல்வேறு அடிப்படைகளில் இவற்றை வகைப்படுத்தினர்.

கனஆய்வு செய்து பழமொழி, விடுகதைகளைத் திரட்டிய ஆய்வாளர்கள் தங்களுடைய தேவைக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப இவற்றை வகைப்படுத்தினர். பழமொழி விடுகதை இரண்டும் கேட்பவரை மையமிட்டு அமைந்தவை. எனவே அதற்கேற்ற மொழிக் கூறுகளை உரையாடல் பண்புகளைக் கொண்டிருக்கும். எனவே இந்த அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

பெரும்பாலும் பேச்சு வழக்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு இவை அமையும். அதனாலே சாதி,வட்டாரக் கிளைமொழிப் பண்புகள் இவற்றில் காணப்படும். எனவே எழுத்திலக்கிய மரபில் காணப்படும் செவ்வியல் மரபுகளை, மொழி உட்பட எதையும் காண முடியாது. வாய்மொழி இலக்கியத்திலிருந்துதான் புலவர்களால் செவ்வியல் இலக்கிய மரபுகள் உருவாக்கப்பட்டன; இலக்கண விதிகள் ஏற்படுத்தப்பட்டன என்பதை நாம் மறக்கக் கூடாது.

வினாவிடை அமைப்பில் காணப்படும் விடுகதை, ஒரு தொடராக அமையும் பழமொழி இரண்டும் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. எனவே சொல்லப்படும் கருத்தின் அளவிற்கேற்ப வடிவம் அமையும். சிறியதாகவோ நீண்டதாகவோ அமைந்திருக்கும் பழமொழி, விடுகதைகளை அளவின் அடிப்படையில் வகை செய்ய முடியாது. கருத்தும் சொல்லுபவன் மனோதர்மமும் மட்டுமே அளவை முடிவு செய்யும்.

அதில்தான் இவற்றின் படைப்பாற்றல் உள்ளது. ஒரே பழமொழி, விடுகதை, சாதிக்கேற்ப அல்லது வட்டாரத்திற்கேற்ப மாறுபடும். இந்த மாறுபாடு ஒருசில சொற்களில் அமைந்திருக்கும். எனவே வகைப் படுத்துவோர் இந்த நுட்பத்தை மனங்கொண்டு பகுக்க வேண்டும். பொதுவாக வாய்மொழி இலக்கியங்களைப் பாகுபாடு செய்யும்போது தம்முடைய நோக்கத்திற்கேற்ப, பாகுபாட்டின் அடிப்படைகளை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானது.

பழமொழி, விடுகதைகளின் அடிப்படை

பழமொழி, விடுகதை இரண்டும் உரைநடையில் அமைந்தவை என்று மேலே கண்டோம். பழமொழி கருத்தைக் கூறுவதை முதன்மையாகக் கொண்டது: தொடராக, வாக்கியமாக அமையும். எனவே கருத்தை முதன்மையாகக் கொண்டு.

அதற்கேற்பச் சொற்களைப் பயன்படுத்தும் ஓர் இலக்கிய வகை அது. கேட்பவனுக்குக் கருத்து மனதில் பதியுமாறு வெளிப்படையாகச் சொல்லுவது இதன் அடிப்படையாகும். அதனால், குறிப்பாக மறைத்துக் கூறும் உத்திகள் இதில் இடம் பெறா. நேரடியாக முகத்தில் அறைந்தால் போல், கருத்தை வெளிப்படுத்துவது இதன் பண்பாகும்.

பொழுது போக்கிற்குரிய இலக்கியக் கூறுகள், பழமொழியில் இடம் பெறா. பிற்காலத்தில் பழமொழி நானூறு என்று செவ்வியல் இலக்கியமாக எழுதப் பட்டபோது, அதில் கற்பனை, அணிநலம். உவமை போன்ற இலக்கியக் கூறுகள் இடம் பெற்றன. வாய்மொழி மரபிலிருந்து வளர்ந்த புலமைக் கூறுகள் இவை விடுகதை, வினாவும் விடையுமாக அமையும்.

வினாவிற்குரிய பகுதி நீண்டதாக அமையும். விடை மிகச் சுருக்கமாக அமையும். கருத்து கூறுவது அடிப்படை என்றாலும் அதை வெளிப்படையாக இல்லாமல் மறைத்துக் கூறுவது விடுகதை. விடுகதை போடுபவரின் அறிவுத்திறனைக் காட்டுவதற்காகவும், கேட்பவர் அவ்வளவு சுலபமாக எளிதில் விடை காண முடியாதபடி சிக்கலானதாகவே வினா இதில் அமையும்.

விடுகதை போடுபவரின் புத்திக் கூர்மையைக் காட்டுவதும் விடுகதையில் உள்ள புதிரை விடுவித்து விடை கூற முடியாமல் எதிராளி திணறுவதுமாக அமைப்பது விடுகதையின் சிறப்பாகும்.

பிற்காலத்தில் எழுத்திலக்கியத்தில் வினா-விடையாக அமையும் அம்மானை, சாழல் போன்ற இலக்கியவகைகள்,இதிலிருந்து உருவானவை. வினா-விடைப் பண்பே இவற்றில் முதன்மையாக அமைந்தது. சிலப்பதிகாரத்தில் அம்மானை இடம் பெற்றது. திருவாசகத்தில் சாழல் இடம் பெற்றது. இவ்வாறு நாட்டுப் புற இலக்கிய வகைகள் செவ்வியல் (எழுத்து) இலக்கியம் தோன்ற முன் மாதிரியாக அமைந்தன.


காகங்களும் மற்றும் ஆந்தைகளும் | நாம் தமிழர் களஞ்சியம்

 பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது அந்த ஆலமரத்தில் காக்காக்களின் அரசனான வாமனன் என்ற ஒரு காகம் காக கூட்டத்துடன் வசித்து வந்தது. அந்த ஆலமரத்தின் அருகாமையில் ஒரு குகை ஒன்று இருந்தது. அந்த குகையில் ஆந்தைகள் வசித்து வந்தன. அந்த ஆந்தைகளின் அரசன் சோமனன் என்ற ஆந்தை எனது அந்த ஆந்தை கூட்டத்திற்கு அரசராக இருந்தது.

காக்கைகளுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் ஆந்தைகள் ஆனது காகங்களின் மீது பெருமளவில் கோபமாகவும் வன்மையாகவும் இருந்தது. இதன் மூலமாக ஆந்தைகள் கூட்டமானது இரவு நேரங்களில் சில காகங்களை தினமும் கொன்று வந்தன. 

ஏன் இரவு நேரங்களில் கொள்கிறது என்றால் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் மட்டுமே நன்றாக பார்க்க முடியும். ஆனால் காகங்களால் இரவு நேரங்களில் அவ்வாறு பார்க்க முடியாது. இவ்வாறு குழந்தைகள் கூட்டமானது ஒவ்வொரு இரவும் காகங்களை கொன்று வந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் காகங்களின் அரசனான வாமனன் தன் காகம் கூட்டம் குறைவதை கண்டுபிடித்து விட்டான். இதனால் அவன் மிகவும் துன்பத்திற்கு ஆளான. உடனே வாமனன் தனது அரசவையில் உள்ள நம்பிக்கை உள்ள அமைச்சர்களுக்கு கூட்டம் கூட்டி அவசரமாக வர வைத்தது. காகங்களின் அமைச்சர்கள் கூட்டத்திற்கு வந்தவுடன் அந்த அமைச்சர்களிடம் காகமானது இதுபோல் நம்முடைய காகக்கூட்டமானது குறைந்து கொண்டே வருகிறது இதற்கு என்ன செய்யலாம் என்று அனைத்து அமைச்சர் காகங்களிடமும் ஆலோசனை கேட்டது. 

உடனே அரச காகத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது. ஆந்தைகளால் தான் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிந்து கொண்டது. உடனே அரச காகமானது இரவு நேரங்களில் நம்மால் பார்க்க முடிவதில்லை. இதனை தெரிந்த ஆந்தைகள் இரவு நேரங்களில் வருகின்றன என்பதை அறிந்து கொண்டது. உடனே அமைச்சர்களிடம் கூறியது. பிறகு பகல் பொழுதில் அவை எங்கே ஒளிந்து இருக்கின்றன என்று நமக்கு தெரிவதில்லை. அதனால் நாம் சண்டை மற்றும் சமாதானம் இடத்தை மாற்றுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் அல்லது நட்பு உறவு கொள்ளுதல் அல்லது வஞ்சகமாக ஏமாற்றுதல் இவ்வழிகளில் நாம் ஏதாவது ஒரு வழியை பின்பற்றலாம் என்று கூறியது. அமைச்சர்களிடம் நான் கூறியதில் எது சரியாக இருக்கும் என்று ஒருவர் ஒருவராக எடுத்துரைக்க வேண்டும் என்று கூறியது. 

மொத்தமாக ஐந்து அமைச்சர்கள் இருந்தனர். இந்த ஐந்து அமைச்சர்களும் ஒவ்வொரு வழியாக பேசத் தொடங்கினர்.

ஒரு அமைச்சர் காகம் ஆனது அரசரே வலிமையான எதிரியுடன் நாம் போர் புரிவது நமக்கு நல்லதில்லை என்று கூறியது. அந்த கூட்டத்தின் அரசனான சோமனன் மிகவும் வலிமை உடையவன் மற்றும் நமக்கு கண்கள் சரியாக தெரியாத நேரத்தில் அவன் நம்மை தாக்குகிறான் என்று கூறியது. எனவே நாம் அவர்களுடன் சமாதானம் மேற்கொள்வது தான் சரியாக இருக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் காகம் கூறியது.

அடுத்ததாக அரசன் அடுத்த அமைச்சரை பார்த்து உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கூறுங்கள் என்று கேட்டது. 

இரண்டாவதாக உள்ள அமைச்சர் காகமானது அரசரே ஆந்தைகள் கூட்டமானது மிகவும் மோசமானது மற்றும் அந்த ஆந்தைகள் கூட்டத்துடன் நாம் சமாதானம் செய்வது நமக்கு நீண்ட நாள் நிலைக்காமல் இருக்கும் என்று கூறியது. மேலும் நாம் அவற்றுடன் எதிர்த்து போரிட்டால் மட்டுமே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கூறியது. 

அடுத்ததாக அரசர் மூன்றாவதாக உள்ள அமைச்சரை பார்த்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்டது. 

அரசரே ஆந்தைகள் கூட்டம் எனது மிகவும் மோசமானது மிகவும் பேராசை கொண்டது மேலும் ஆந்தைகள் கூட்டம் ஒழுக்கம் இல்லாதது என்று கூறியது. எனவே நாம் ஆண்டுகள் கூட்டத்துடன் சமாதானம் செய்ய முடியாது மேலும் நமது கூட்டமானது மிகவும் பலவீனமாக இருப்பதால் ஆந்தைகள் கூட்டத்துடன் எதிர்த்து போரிடவும் முடியாது அதனால் நாம் நமது கூட்டத்துடன் வேறொரு இடத்திற்கு சென்று அங்கு போய் நிம்மதியாக வாழலாம் இதுவே நமக்கு நல்லது என்று கூறியது. 

அடுத்ததாக அரசர் நான்காவதாக உள்ள அமைச்சரை பார்த்து உங்களுடைய கருத்துக்கள் என்ன என்று கூறினார். 

உடனே நான்காவது அமைச்சர் காகம் ஆனது அரசரே மேலே கூறப்பட்டுள்ள மூன்று கருத்துகளும் எனக்கு சரியாக படவில்லை. நாம் ஏன் குறைகளை போல வேறு ஒரு இடத்திற்கு சென்று அங்கு வாழ வேண்டும். நாம் இங்கேயே இருந்து கொண்டு நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டு ஆந்தைகளுக்கு தொல்லை கொடுப்போம் என்று நான்காவது அமைச்சர் காகம் கூறியது.

அரசர் காகம் ஆனது ஐந்தாவது ஆக உள்ள அமைச்சர் காகத்தை பார்த்து நீ என்ன யோசிக்கிறாய் என்று கேட்டது. 

ஐந்தாவது அமைச்சருக்காகமானது அரசரே நீங்கள் தெரிவித்த ஆறு வகையான நடவடிக்கையில் நாம் நட்பு கொள்வது மிகவும் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியது. நாம் பலவீனமாக இருப்பதால் நாம் நம்மை விட பலம் இருப்பவர்களிடம் சென்று நட்புக் கொள்வது மற்றும் உதவியை நாட வேண்டும் என்று ஐந்தாவது காகம் கூறியது. 

அரசர் காகம் ஆனது உங்களுடைய கருத்துகளுக்கு என்னுடைய நன்றி. நீங்கள் சொன்ன கருத்துகளுக்கு நான் சிந்தித்து என்ன செய்யலாம் என்பதை நான் பிறகு கூறுகிறேன் இப்போது நீங்கள் அனைவரும் உங்களுடைய இடத்திற்கு செல்லலாம் என்று அரசர் காகம் மற்ற  அமைச்சர் காகங்களை அனுப்பி வைத்தது.

உடனே அரச காகம் தன் தந்தையிடம் நம்பிக்கையாக இருந்த ஒரு முதிய காகத்திடம் சென்று நான் ஒரு சோதனைக்காக தான் உங்கள் முன்பு அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டேன். நீங்களும் அமைச்சர்கள் சொன்ன கருத்துக்களை கேட்டீர்கள் நான் எதை பின்பற்ற வேண்டும் எனக்கு நீங்கள் கூற வேண்டும் என்று அரசர் காகம் கேட்டது. 

உடனே அந்த முதிய காரணமானது மன்னா நீதி நெறிப்படி அமைச்சர்கள் கூறிய அனைத்து அபிப்பிராயமும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் நமக்கு எது நல்லது என்று நினைக்கிறேன் என்றால் நயவஞ்சகம் புரிவதுதான் சரியாக இருக்கும் என்று கூறியது. தந்திரத்தால் நம்மால் நம்மை விட எதிரியை கூட சுலபமாக விட்டு விடலாம் என்று கூறியது. நீங்கள் அவர்களது பலவீனம் என்ன என்று அறிந்து கொண்டு சமயம் பார்த்து ஆந்தைகளை கொன்று விடுங்கள் என்று கூறியது. 

உடனே அரசர் காகம் ஆனது புதிய காகத்தை பார்த்து ஆந்தைகளின் தலைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு தெரியாதே என்று அவரிடம் கேட்டது. 

புத்திசாலித்தனமாக நீங்கள் போய் தினமும் கண்காணித்துக் கொண்டே இருந்தால் அவர்களை கண்டுபிடித்து விடலாம் என்று வயதான காகம் கூறியது. 

அரசருக்காக மனது சிறிது நேரம் கழித்து காக்கைகளுக்கும் குழந்தைகளுக்கும் பகை உண்டாக என்ன காரணமாக இருக்கும் என்று கேட்டது. 

அதற்கு அந்த வயதான காகமானது நான் உண்மை கதை என்னவென்று கூறுகிறேன் என்று சொல்லத் தொடங்கியது. 

இந்த கதையை நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் வலைதள பக்கத்தை தொடருங்கள்....

கதைகள் மூலம் வாய்மொழி இலக்கியம் | நாம் தமிழர் களஞ்சியம்

வாய்மொழி இலக்கியத்தில் மற்றொருவகை, கதைகள், தனிமனிதனுடைய உணர்வு, சிக்கல்கள் ஆகியவற்றைக் கூறும் கதைகள், குடும்ப வாழ்வை மையமிட்டவை, சமூகம் சார்ந்த கதைகள் (சான்றாக ஓர் இனம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடி பெயர்ந்ததைக் கூறும் கதைகள் - கி.ராஜநாராயணின் கோபல்ல கிராமம்), பாலியல் கதைகள், வீரநீர சாகசக் கதைகள், தெய்வக் கதைகள் என்று பலவகைப்படும்.

ஒரு கருத்தைக் கூறுவது இக்கதைகளின் அடிப்படை நோக்கம் நீண்ட காலமாக இக்கதைகள் வாய் மொழியாகவே வழங்கி வருகின்றன. குறிப்பிட்ட ஒருவரால் படைக்கப்படாமல், அவ்வப்போது இட்டுக் கட்டப் பட்டவை இவை.

வாய்மொழி இலக்கியத்திற்குரிய நாம் முன்னர்பார்த்த அத்தனை பண்புகளும் இதற்கும் பொருந்தும். தொடக்க காலத்தில் மனிதன் சேர்ந்து வாழும் போது, பொழுதுபோக்கவும், நீதி கூறவும் இத்தகைய கதைகளை உருவாக்கி இருப்பான். கதைகள், வாய்மொழியாக இடம்விட்டு இடம் பரவி இருக்கும்.

கதைகள், ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. இக்கதைகளை எழுத்திலக்கிய உரைநடைக் கதைகளுக்கான முன்னோடி என்று நாம் கொள்ள வேண்டும். வாய்மொழிக் கதைகளிலுள்ள உத்தி, கதை கூறும் முறை, வடிவம், உள்ளடக்கம் போன்றவை எழுத்திலக்கியக் கதைகளுக்கு முன் மாதிரியாக விளங்குபவை.

எனவே திறனாய்வில் இவற்றை ஒப்பிட்டுப் படிப்பதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கதை கேட்பதும் கதை சொல்லுவதும் மனிதமனத்தின் இயல்பாகும். வெளிப்படையாகச் சொல்ல முடியாத அடிமன உணர்வுகளை வெளியிடுவதற்கு வாய்மொழி இலக்கியம், குறிப்பாகக் கதைகள் ஏற்ற வடிவமாகும். எனவே, கதைகளை இந்த நோக்கில் பயன்படுத்தினர்.

கதைகளின் வகை

வாய்மொழிக் கதைகளைப் பல்வேறு வகைகளாக அவற்றின் தன்மைநோக்கிப் பகுத்துள்ளனர். சில கதைகள் அளவில் நீண்டவையாக அமையும். உரைநடை வடிவில் அமையும் கதைகள் மட்டுமே இங்கு பேசப்படுகின்றன. பாடல் வடிவில் அமைந்த கதைகள் உள்ளன.

அவை கதைப்பாடல்கள் (Ballad) என்று வழங்கப் படும். பழைய காலக் காப்பியம், புராணம், இதிகாசம் போன்றவை அவை. அவைகளிலும் கதை இருப்பினும், பாடலும் கதையும் கலந்ததால் அவை கதைப்பாடல் எனப்பட்டன. எனவே, கதைப்பாடல் தவிர்த்த ஏனைய உரை நடையில் கதைகளையே நாம் இங்குக் கவனத்தில் அமைந்த வாய்மொழிக் கொள்ளுகிறோம்.

 இக்கதைகள் பொழுதுபோக்கை மையமிட்டு இருந்தாலும் அடிப்படையில் ஒரு கருத்தைக் (நீதியை) கூறுபவை, பொதுவாக வாய்மொழிக் கதைகள் யாவும் நீதி சொல்லும் நோக்கத்தில் அமைந்தவை. அளவில் மிகக் குறுகிய சின்னஞ்சிறிய கதை முதல் நீண்ட அளவிலான கதைகள் வரை இவை பல திறத்தன.

கதை கூறும் முறையில் முன்னே இருக்கும் கதை கேட்பவர்களை மனத்தில் கொண்டு அவர்களுக்குக் கதை கூறுவது போன்ற முறையில் இவை அமைந்திருக்கும். கதையைக் கூறும் ஒருவர் கதைசொல்லி ஆகிறார். எனவே, அதற்கேற்பக்கதை கூறும் உத்திகள் கதை முழுவதிலும் காணப்படும்.

இகதைகளுக்குக் குறிப்பிட்ட இலக்கணம் கிடையாது அளவில் நீண்ட கதைகள், கதை கூறும் முறையில் கதைக்குள் கதை என்னும் உத்தியைக் கொண்டிருக்கும். இக்கதைகளில், விலங்கு, தேவைதைகள், கடவுளர், மனிதர் எனப்பலரும் கதை மாந்தர்களாக இடம் பெறுவர். எனவே கதை மாந்தர் அடிப்படையில் விலங்குக் கதை, கடவுளர்கதை என்று வகைப்படுத்தவும் கூடிய முறையில் இவை இருக்கும். கதையின் உள்ளடக்கம், கதை மாந்தர், கதையின் அமைப்பு (உருவம்) என்ற அடிப்படைகளில், இக்கதைகள் ஆய்வாளர்களால் வகைப்படுத்தப்படுகின்றன.

கதைகளின் பகுப்பு

வாய்மொழிக் கதைகள், பல்வேறு வகை சார்ந்தவை என்று மேலே பார்த்தோம். இவற்றின் அடிப்படை நோக்கம் கருத்தைக் கூறுவதும் பொழுது போக்கிற்குப் பயன்படுவதுமாகும். கதைகள் அளவில் நீண்டதாகவும், சிறியதாகவும் அமைந்துள்ளன. கதைகள் பல்வேறு விதமான உள்ளடக்கத்தைக் கொண்டவை.

எனவே உள்ளடக்கம், கதையின் அளவு என்ற அடிப்படைகளில் இவை வகைப் படுத்தப்பட்டு வருகின்றன. சில கதைகள், நேரடியாகக் கருத்தைக் கூறும்; சில குறிப்பாகக் கருத்தைக் கூறும். எனவே, கருத்துக் கூறும் முறையில் இவை பகுக்கப்படலாம்.

வாய்மொழிக்கதைகளில், மனிதர் அல்லாத விலங்குகள், பறவைகள், தேவதைகள், கடவுளர் போன்றோர் மாந்தர்களாக இடம் பெறுவர்.இவ்வகைக் கதைகளில் காட்டப்படும் வாழ்க்கையும் நிகழ்வுகளும் 95 கருத்தைக் கூறவே பயன்படுத்தப்படும்.

 வழக்கத்திற்கு மாறான இத்தகைய கதை மாந்தர்களைக் கொண்டு கதைசொல்லி ஒரு கருத்தையே கூறுகிறான். எனவே இக்கதை மாந்தர்கள் மனிதர்களுடைய வெவ்வேறு பண்புகளையே உருவகித்து நிற்கின்றனர். வாய்மொழிக் கதை மரபில் இது ஒரு வகை. சில கதைகளில் உலகம் தோன்றிய காரணம், உலக முடிவு போன்ற கற்பனைகள் இடம் பெறும்.

 இப்பகுதிகள், நம் மொழியிலுள்ள எழுத்திலக்கியமான புராணங்களிலும் உலகத் தோற்றம், உலக முடிவு என்பவைகளாக இடம் பெறும்,வாய்மொழிக் கதை மரபிலிருந்து இக்கூறுகளைப் புராண ஆசிரியர் பெற்றுள்ளனர் என அறியலாம். புராணங்கள் யாவும் சூத முனிவர் மாணவர்களுக்குக் கதை சொல்வதாகவே உள்ளன. இதுவும் வாய்மொழிக் கதை மரபு. சூதர் கதை சொல்லியின் அடையாளம். இவ்வாறு எழுத்திலக்கிய மரபுகள் வாய்மொழி இலக்கிய மரபுகளை எந்த அளவிற்கு பெற்று செழுமைப்படுத்திக் கொண்டுள்ளன என ஒப்பிட்டு அறியலாம்.

கலைகள் சார்ந்த பாடல்கள் மூலம் வாய்மொழி இலக்கியம் | நாம் தமிழர் களஞ்சியம்

 நாட்டுப்புறக் கலைகள் எண்ணற்றவை. அவைகளில் நிகழ் கலை ஒருவகை. பெரும்பாலும் ஆடல்பாடல் மரபுகளைக் கொண்டதாக அவை அமையும். இவைகளில் பாடப்படும் பாடல்கள் வாய்மொழி மரபாக வழங்கி வருகின்றன. அண்மைக்காலமாக ஆய்வாளர்கள் இவற்றைத் தொகுத்தும், ஆய்வு செய்தும் வருகின்றனர்.இப்பாடல்கள், சமயச் சார்புடைய நிகழ்வுகளின் போது, பாடி ஆடி நடிக்கப்பட்டு வருகின்றன. திறனாய்வு நோக்கில் கவிதை வகைகளில் ஒன்றாக இவற்றை நாம் அறிய வேண்டும்.

இப்பாடல்கள் தெருக்கூத்து போன்ற நாடக வகை சார்ந்தவை; வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, தேவராட்டம், சேவையாட்டம் போன்ற ஆட்டவகை,பாடல் வகை சார்ந்தவை. ஒயிலாட்டம் போன்ற வேறு நிகழ்கலை வடிவம் சார்ந்தவை எனப் பலவாறாக அமையும். இலக்கிய நோக்கில் இவை கவிதை. 

இவை இசைப் பாடல்களாக உள்ளன. பெரும்பாலும், சூழலுக்கு ஏற்பக் கதை தழுவிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும் இவை உள்ளன. பிற வாய்மொழிப் பாடல் கவிதை மரபிலிருந்து இவை முற்றிலுமாக மாறுபடுகின்றன. நீண்ட பாடலமைப்பு இசை, இலக்கியவகை, கூத்து/நிகழ் கலைமரபுக்கு ஏற்ப அமையும் மொழிப் பயன்பாடு, கதை தழுவிய அமைப்பு என்ற பன்முகத் தன்மைகளை இப்பாடல்களில் காணலாம்.

எழுத்திலக்கிய வகைகள் பலவற்றிற்கும், பிற்கால நாடக, ஆடல் மரபுப் பாடல்களுக்கும் இவை முன்மாதிரியாக உள்ளன. இந்த அடிப்படையில் திறனாய்வு நோக்கில் நாம் இவை பற்றி அறிய வேண்டும். 

கவிதை இலக்கிய வகை எவ்வாறு வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபிற்கு வளர்ச்சி பெற்றது என்பதை இதன் வழி நாம் அறிய முடியும். அத்துடன் இருவேறு கவிதை இலக்கிய வகைகளை ஒப்பிட்டு அவற்றின் தனித் தன்மைகளையும் உணர முடியும்.

கலைகள் சார்ந்த பாடல்களின் வகைகள் 

கலைசார்ந்த பாடல்கள், பல்வேறு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. எழுத்திலக்கியக் கவிதைகளை உள்ளடக்கம், உருவம், உத்தி என்ற அடிப்படை கனில் வகைப்படுத்துவது போல இவற்றை வகைப்படுத்த முடியாது. இவை மாறுபட்ட அடிப்படைகளைக் கொண்டது. இப்பாடல்கள் லக்கண மரபிற்குக் கட்டுப்படாதவை. எனவே. கூத்துப்பாடல், ஆட்டப்பாடல், தனி ஒருவர் நிகழ்த்தும் கலை, குழுவினர் நிகழ்த்தும் கலை என்றெல்லாம் நிகழ்முறைக் கேற்ப இப்பாடல்களைத் திறனாய்வாளர் வகைப்படுத்துகின்றனர்.

கூத்து, பழைமையான வடிவமாகும். தமிழின் நாடக வகைகள் அனைத்திற்கும் அது மூல வடிவம்.கூத்து மரபில் எண்ணற்ற பாடல் வகைகள் இடம் பெறுகின்றன. இவையாவும் இசைப்பாடல்கள். ஆடும் முறைக்கேற்ற, தாளச் சந்தங்களை உடையவை. எனவே, கூத்துப்பாடல்களை இந்த அடிப்படையிலே வகைப்படுத்த வேண்டும். சான்றாகத் தாளத்துடன் கூடிய தர்க்கம், தரு போன்ற பாடல்கள் ஒருவகை; தாளமின்றிப் பாடப்படும் விருத்தப்பாடல்கள் ஒருவகை, ஆனால் இரண்டும் இசைப்பாடல்கள்.

பிற்காலத்தில் தோன்றிய தமிழ் இசை நாடகங்கள் அனைத்திலும் தரு, தர்க்கம், விருத்தப்பாடல் வகைகளைக் காணலாம். இவை இசைப் பண்புகளோடு கூடிய கவிதை என்பதை நாம் மறக்கக்கூடாது. குறிப்பிட்ட சூழலில், கதை நிகழ்ச்சிக்கேற்ப, ஒரு கருத்தையோ, ஓர்உணர்வையோ மையமிட்டு இக்கவிதை அமையும்.

அதே நேரத்தில் நிகழ்கலையான கூத்திற்கேற்ப ஒருவரோ அல்லது இருவர் மாறிமாறியோ அல்லது பலர் குழுப்பாடலாகவோ பாடுமாறு வை அமையும். எனவே இக்கவிதையைத் திறனாய்வு செய்யும் ஒருவர் இவை அனைத்தையும் மனத்தில் கொள்ள வேண்டும். கவிதையின் உள்ளடக்கம், மொழி வெளிப்பாடு என்பவை இவைகளைக் கெண்டு கட்டமைக்கப்படும் அதேநேரத்தில் வாய்மொழி மரபிற்கேற்ற இலக்கணத்திற்குள் கட்டுப்படாத கவிதையாக அமையும். அதன் சொற்களே இதைக் காட்டும். வட்டாரத் தன்மையும், சாதிக் கிளை மொழியும், அதன் சொற்களில் வெளிப்படுவதை நன்கு உணரலாம்.

கலைகள் சார்ந்த பாடல்களின் பகுப்பு

கலை சார்ந்த பாடல்களைப் பல்வேறு வகைகளாகத் திறனாய்வாளர் பகுத்துள்ளனர்.இப்பாடல்கள் நிகழ்கலையில் பாடப்படுபவை. ஆட்டஞ் சார்ந்தவை, சமய நிகழ்வுகள் சார்ந்தவை என்று பல்வேறு தன்மையன. பாடப்படும் சூழல், கலையில் அதன்பயன்பாடு, பாடுவோர் என்ற அடிப்படை களில் இவை பகுக்கப்படுகின்றன. பாடல்களுக்கு இலக்கண மரபு இல்லாதது போல, பகுப்பிற்கும் திட்டவட்டமான வரையறை இல்லை. திறனாய்வாளர். தத்தம் தேவைக்கேற்ப, குறிப்பிட்ட சில அடிப்படைகளில், இப்பகுப்பைச் செய்துள்ளனர். பகுப்பிற்கான அடிப்படைகளைத் திறனாய்வுகளில் பதிவு செய்வர்.

மேலே நாம் குறிப்பிட்ட கூத்துப் பாடல்களில் இடம் பெறும் தரு ஒருவகை இசைப்பாடல் அதே நேரத்தில் கதை நிகழ்ச்சிக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் 1 அப்பாடல் வகை பயன்படுத்தப்படும். கூத்தில் பல்வேறு வகைகளாகத் தரு இடம் பெறும். ஒரு மாந்தர், கூத்தரங்கில் அறிமுகமாகும்போது பாடப்படுவது ஒருவகை (பிரவேசத்தரு -நுழைவுத் தரு) இரு மாந்தர்கள் உரையாடும்போது பாடப்படுவது ஒருவகை (உத்தர பிரதி உத்தரத் தரு). இருமாந்தர்கள் வாக்குவாதம் செய்யும்போது இடம் பெறுவதே தர்க்கத்தரு. இழப்பின் காரணமாக ஒருவர் புலம்புவது புலம்பல் தரு என்று பல்வேறு வகைகளாகத் தரு என்ற இசைப்பாடல் அமைகிறது.

பிற்காலத்தில் தமிழில் தோன்றிய இசை நாடகங்கள் யாவும் இந்தத் தருவகையை ஏற்றன. இசைப்பாடல்களில் ஒருவகையான கீர்த்தனை, இதிலிருந்து தோன்றியது. இசையோடு கூடிய கூத்துப்பாடல் வகை பல்வேறு வகைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதை இதனால் அறியலாம். சூழலுக்கேற்ற கூத்து நிகழ்வதற்கு ஏற்ப வ்வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திறனாய்வு நோக்கில் கவிதை வகை எவ்வாறு பெருகி வளர்ந்துள்ளது என்று அறிவதற்கு இது உதவும்.

பாடல்கள் மூலம் வாய்மொழி இலக்கியம்

இலக்கிய மரபில், வாய்மொழி இலக்கியமே முதன் முதலாகத் தோன்றியது.உலக மொழிகள் அனைத்திலும் வாய்மொழி மரபு மிகத் தொன்மையானது. எழுத்திலக்கியத்திற்கு முந்தியதான வாய்மொழி இலக்கிய வகைகள், அதற்கான அடிப்படைகள் குறித்து இந்தப் பாடத்தில் அறிய உள்ளோம்.

வாய்மொழி இலக்கியத்தில் காணப்படும் உள்ளடக்கம், உருவம், உத்தி சார்ந்த மரபுகளைப் எந்த அளவிற்கு எடுத்துப் பின்னர் எழுத்திலக்கியப் படைப்பாளர்கள் பயன்படுத்தினர் என்று அறிவது திறனாய்வின் தேவையாகும். அதற்காகவே வாய்மொழி இலக்கியம் குறித்துக் கற்கிறோம்.

வாய்மொழி இலக்கியம் - பாடல்கள்

வாய்மொழி இலக்கியத்தில் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. வாய்மொழி 95 படைப்பாளரால் உருவாக்கப்படாதது. இலக்கியம், குறிப்பிட்ட காலங்காலமாக மக்களிடையே வாய்மொழி மரபாகப் பாடப்பட்டு வருவது. செவிவழியாகக் கேட்டுக் கேட்டுப் பாடப்படுவதால், அவ்வப்போது, ஒவ்வொருவராலும் சேர்க்கைகளும், மாற்றங்களும் பெற்றுப் பாடல் மாறியபடியே இருக்கும். குழலுக்கேற்பப் பாடப்படும் தன்மையும் இதற்குக் காரணமாகும்.

மக்கள் பேச்சு மொழியில் இவை அமையும், வாய்மொழி இலக்கிய வகைகள், நாட்டுப்புற மக்களின் சமய மரபு, பண்பாடு, இசைமரபு, பேச்சுவழக்குச் சொற்கள், நாட்டுப்புற இலக்கிய வகைகள் என்பவைகளைக் கொண்டிருக்கும். இப்பாடல்கள் நில அடிப்படையில் வட்டாரப் பண்பைக் கொண்டிருக்கும். அது போலச் சாதிப் பண்புகளையும் கொண்டிருக்கும். எனவே, சாதி வட்டாரத் தன்மைகளுக்கேற்ப வேறுபட்டு அமையும்.

இப்பாடல்கள் சூழல் அடிப்படையில் பாடப்படுபவை. ஒருவராலோ, பலராலோ குழுவினராலோ இவை பாடப்படும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகளின்போது பாடப்படும் பாடல்கள், சமயப்பாடல்கள், பல்வேறு தொழில் சார்ந்த தொழிற்களப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், பொழுது போக்குப் பாடல்கள் என்று பலவகையாக வை அமையும், இப்பாடல்கள் யாவும் இசை மரபிற்கு உட்பட்டவை. செவ்வியல் லக்கியங்களுக்குரிய இலக்கணங்கள் இவற்றில் இடம் பெறா.

இப்பாடல்களைத் தொகுத்து வகைப்படுத்தி, வைகளுக்கு விளக்கமும் திறனாய்வும் அறிஞர் கூறினர். இப்பாடல்களைக் கள ஆய்வில் மக்களிடமிருந்து தொகுத்தனர். பாடப்படும்போது அதே சூழலில் தொகுத்து வகைப்படுத்தினர். இப்படித் தொகுத்த ஆய்வாளர்கள் மூலமே நமக்குப் பாடல்கள் கிடைத்தன.

பாடல்களின் வகை

வாய்மொழி இலக்கியப் பாடல்களைப் பல்வேறு வகைகளாக அறிஞர்கள் பகுத்துள்ளனர். தாலாட்டுப்பாடல் முதல் ஒப்பாரிப்பாடல் முடிய மனித வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த பாடல்களை வகைப்படுத்தி உள்ளனர். தொழிற் களத்தில், தொழில் செய்யும்போது பாடப்படும் பாடல்கள் ஒருவகை, நடவுப்பாடல், ஏற்றப்பாடல், தெம்மாங்கு, கதிரறுப்புப் பாடல் என்று அவை அமையும்.

ஏசல்பாட்டு, கேலிப்பாட்டு என்பனவும் அமையும். திருவிழாக்களிலும் சமயச் தடங்குகளிலும் வழிபாட்டிலும் ஏராளமான பாடல்கள் உள்ளன. சான்றாக, முளைப்பாரி, கும்மி, கோலாட்டம், வருணிப்புப்பாடல் உடுக்கடிப் பாடல், நீண்ட கதைப்பாடல்கள் என்று நாட்டுப்புறச்சமயஞ்சார்ந்த பாடல்கள் அமையும்.

மேலே கூறிய பெரும் பிரிவுகள் அல்லாமல் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் நிறையக் காணப்படும். நாட்டுப்புற இலக்கியப் பாடத்தில் இதை விரிவாக அறிந்து கொள்ளலாம். கவிதை என்ற இலக்கிய வகையில், வாய்மொழி இலக்கியம் குறித்த வகைப்பாடு.

அதன் அடிப்படை என்ற அளவிலே இதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து, எழுத்திலக்கியம் எந்த அளவிற்கு இலக்கிய மரபுகளைப் பெற்றுள்ளது என்று அறிந்து கொள்ள மட்டுமே நமக்கு இது தேவை. தொல்காப்பியர் பண்ணத்தி, பிசி. முதுமொழி, அங்கதம் போன்ற வாய்மொழி இலக்கிய வகைகளைக் கூறியுள்ளார். 

சங்க அக, புறப் பாடல்களில் வாய்மொழி இலக்கிய மரபுகள் பல இடம் பெறுவதைத் திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நம் மொழியில் மட்டுமல்லாமல், கிரேக்கம், வடமொழி போன்ற மொழிகளிலும் இவ்வாறு வாய்மொழி மரபின் செல்வாக்கு இருப்பதை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே திறனாய்வு நோக்கில் ஒப்பிட்டறிய வாய்மொழி இலக்கியம் - கவிதை - குறித்த அறிமுகம் நமக்குத் தேவை.

பாடல்களின் பாகுபாடு

மனித வாழ்க்கையில் இடம் பெறும் நிகழ்வுகள் அடிப்படையில் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாடல்கள் ஒரு வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் பாடல்கள் போல்வன தாலாட்டு, ஒப்பாரி, திருமணச் சடங்குப் எழுத்திலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளன. வாய்மொழி இலக்கியத்தில் இலக்கண மரபுகள் இடம் பெறா என்று முன்னர் பார்த்தோம்.

ஆனால் வாய்மொழி இலக்கியச் செல்வாக்கினால் உருவாகும் எழுத்திலக்கியம் இலக்கண மரபுகளோடு படைக்கப்படும். சான்றாக, வாய்மொழி இலக்கியத்திலுள்ள தலாட்டுப் பாடலில் இலக்கண மரபுகளைத் தேட முடியாது. ஆனால், குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டு, பெரியாழ்வார் பாடிய தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு ஆகியன யாப்பு நெறிக்கு உட்பட்டு அமைந்தவை.

தொழிற்களப் பாடல்களில் பல்வேறு வகையான தொழில்களுக்குரிய பாடல்கள் உள்ளன. உழவுத் தொழில் சார்ந்த நடவுப்பாடல்கள், பள்ளு இலக்கியத்தில் நடவுப் பாடல் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தவை. சிலப்பதிகாரத்தில் ஏர்மங்கலம், பொலிக பாட்டு (அறுவடை முடித்து நெல் தூற்றும்போது பாடப்படுவது) போன்ற பாடல் வகைகள்கூறப்பட்டுள்ளன. பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே சிலப்பதிகாரத்திற்கு முன்பு இவ்வகைப் பாடல்கள் வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து எழுத்திலக்கியம் பெற்ற வகை என்று கூறலாம். தமிழ் இலக்கிய மரபில் இம்மாதிரியான இலக்கிய வகைகள் நிறைய பாடல்களில் முளைப்பாரிப்பாட்டு, கும்மிப்பாடல், உள்ளன. சமயப் கொண்டாட்டப் பாடல் போல்வன எழுத்திலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.

சான்றாகக் 'கண்ணுடைய அம்மன் பள்ளு' நூலில் முளைப்பாரிப்பாட்டு, கும்மிப்பாடல் போல்வன உள்ளன. வாய்மொழி இலக்கியத்தில் இருந்து இந்த இலக்கிய வகைகள் தோன்றி, எழுத்திலக்கிய படைப்பாக இலக்கணம் மரபுடன் உறுபெற்றன. பாடு பொருள் பாடப்படும் சூழல் என்ற அடிப்படையில் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியப் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.