Tuesday, 13 January 2026

காகங்களும் மற்றும் ஆந்தைகளும்

 பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது அந்த ஆலமரத்தில் காக்காக்களின் அரசனான வாமனன் என்ற ஒரு காகம் காக கூட்டத்துடன் வசித்து வந்தது. அந்த ஆலமரத்தின் அருகாமையில் ஒரு குகை ஒன்று இருந்தது. அந்த குகையில் ஆந்தைகள் வசித்து வந்தன. அந்த ஆந்தைகளின் அரசன் சோமனன் என்ற ஆந்தை எனது அந்த ஆந்தை கூட்டத்திற்கு அரசராக இருந்தது.

காக்கைகளுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் ஆந்தைகள் ஆனது காகங்களின் மீது பெருமளவில் கோபமாகவும் வன்மையாகவும் இருந்தது. இதன் மூலமாக ஆந்தைகள் கூட்டமானது இரவு நேரங்களில் சில காகங்களை தினமும் கொன்று வந்தன. 

ஏன் இரவு நேரங்களில் கொள்கிறது என்றால் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் மட்டுமே நன்றாக பார்க்க முடியும். ஆனால் காகங்களால் இரவு நேரங்களில் அவ்வாறு பார்க்க முடியாது. இவ்வாறு குழந்தைகள் கூட்டமானது ஒவ்வொரு இரவும் காகங்களை கொன்று வந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் காகங்களின் அரசனான வாமனன் தன் காகம் கூட்டம் குறைவதை கண்டுபிடித்து விட்டான். இதனால் அவன் மிகவும் துன்பத்திற்கு ஆளான. உடனே வாமனன் தனது அரசவையில் உள்ள நம்பிக்கை உள்ள அமைச்சர்களுக்கு கூட்டம் கூட்டி அவசரமாக வர வைத்தது. காகங்களின் அமைச்சர்கள் கூட்டத்திற்கு வந்தவுடன் அந்த அமைச்சர்களிடம் காகமானது இதுபோல் நம்முடைய காகக்கூட்டமானது குறைந்து கொண்டே வருகிறது இதற்கு என்ன செய்யலாம் என்று அனைத்து அமைச்சர் காகங்களிடமும் ஆலோசனை கேட்டது. 

உடனே அரச காகத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது. ஆந்தைகளால் தான் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிந்து கொண்டது. உடனே அரச காகமானது இரவு நேரங்களில் நம்மால் பார்க்க முடிவதில்லை. இதனை தெரிந்த ஆந்தைகள் இரவு நேரங்களில் வருகின்றன என்பதை அறிந்து கொண்டது. உடனே அமைச்சர்களிடம் கூறியது. பிறகு பகல் பொழுதில் அவை எங்கே ஒளிந்து இருக்கின்றன என்று நமக்கு தெரிவதில்லை. அதனால் நாம் சண்டை மற்றும் சமாதானம் இடத்தை மாற்றுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் அல்லது நட்பு உறவு கொள்ளுதல் அல்லது வஞ்சகமாக ஏமாற்றுதல் இவ்வழிகளில் நாம் ஏதாவது ஒரு வழியை பின்பற்றலாம் என்று கூறியது. அமைச்சர்களிடம் நான் கூறியதில் எது சரியாக இருக்கும் என்று ஒருவர் ஒருவராக எடுத்துரைக்க வேண்டும் என்று கூறியது. 

மொத்தமாக ஐந்து அமைச்சர்கள் இருந்தனர். இந்த ஐந்து அமைச்சர்களும் ஒவ்வொரு வழியாக பேசத் தொடங்கினர்.

ஒரு அமைச்சர் காகம் ஆனது அரசரே வலிமையான எதிரியுடன் நாம் போர் புரிவது நமக்கு நல்லதில்லை என்று கூறியது. அந்த கூட்டத்தின் அரசனான சோமனன் மிகவும் வலிமை உடையவன் மற்றும் நமக்கு கண்கள் சரியாக தெரியாத நேரத்தில் அவன் நம்மை தாக்குகிறான் என்று கூறியது. எனவே நாம் அவர்களுடன் சமாதானம் மேற்கொள்வது தான் சரியாக இருக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் காகம் கூறியது.

அடுத்ததாக அரசன் அடுத்த அமைச்சரை பார்த்து உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கூறுங்கள் என்று கேட்டது. 

இரண்டாவதாக உள்ள அமைச்சர் காகமானது அரசரே ஆந்தைகள் கூட்டமானது மிகவும் மோசமானது மற்றும் அந்த ஆந்தைகள் கூட்டத்துடன் நாம் சமாதானம் செய்வது நமக்கு நீண்ட நாள் நிலைக்காமல் இருக்கும் என்று கூறியது. மேலும் நாம் அவற்றுடன் எதிர்த்து போரிட்டால் மட்டுமே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கூறியது. 

அடுத்ததாக அரசர் மூன்றாவதாக உள்ள அமைச்சரை பார்த்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்டது. 

அரசரே ஆந்தைகள் கூட்டம் எனது மிகவும் மோசமானது மிகவும் பேராசை கொண்டது மேலும் ஆந்தைகள் கூட்டம் ஒழுக்கம் இல்லாதது என்று கூறியது. எனவே நாம் ஆண்டுகள் கூட்டத்துடன் சமாதானம் செய்ய முடியாது மேலும் நமது கூட்டமானது மிகவும் பலவீனமாக இருப்பதால் ஆந்தைகள் கூட்டத்துடன் எதிர்த்து போரிடவும் முடியாது அதனால் நாம் நமது கூட்டத்துடன் வேறொரு இடத்திற்கு சென்று அங்கு போய் நிம்மதியாக வாழலாம் இதுவே நமக்கு நல்லது என்று கூறியது. 

அடுத்ததாக அரசர் நான்காவதாக உள்ள அமைச்சரை பார்த்து உங்களுடைய கருத்துக்கள் என்ன என்று கூறினார். 

உடனே நான்காவது அமைச்சர் காகம் ஆனது அரசரே மேலே கூறப்பட்டுள்ள மூன்று கருத்துகளும் எனக்கு சரியாக படவில்லை. நாம் ஏன் குறைகளை போல வேறு ஒரு இடத்திற்கு சென்று அங்கு வாழ வேண்டும். நாம் இங்கேயே இருந்து கொண்டு நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டு ஆந்தைகளுக்கு தொல்லை கொடுப்போம் என்று நான்காவது அமைச்சர் காகம் கூறியது.

அரசர் காகம் ஆனது ஐந்தாவது ஆக உள்ள அமைச்சர் காகத்தை பார்த்து நீ என்ன யோசிக்கிறாய் என்று கேட்டது. 

ஐந்தாவது அமைச்சருக்காகமானது அரசரே நீங்கள் தெரிவித்த ஆறு வகையான நடவடிக்கையில் நாம் நட்பு கொள்வது மிகவும் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியது. நாம் பலவீனமாக இருப்பதால் நாம் நம்மை விட பலம் இருப்பவர்களிடம் சென்று நட்புக் கொள்வது மற்றும் உதவியை நாட வேண்டும் என்று ஐந்தாவது காகம் கூறியது. 

அரசர் காகம் ஆனது உங்களுடைய கருத்துகளுக்கு என்னுடைய நன்றி. நீங்கள் சொன்ன கருத்துகளுக்கு நான் சிந்தித்து என்ன செய்யலாம் என்பதை நான் பிறகு கூறுகிறேன் இப்போது நீங்கள் அனைவரும் உங்களுடைய இடத்திற்கு செல்லலாம் என்று அரசர் காகம் மற்ற  அமைச்சர் காகங்களை அனுப்பி வைத்தது.

உடனே அரச காகம் தன் தந்தையிடம் நம்பிக்கையாக இருந்த ஒரு முதிய காகத்திடம் சென்று நான் ஒரு சோதனைக்காக தான் உங்கள் முன்பு அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டேன். நீங்களும் அமைச்சர்கள் சொன்ன கருத்துக்களை கேட்டீர்கள் நான் எதை பின்பற்ற வேண்டும் எனக்கு நீங்கள் கூற வேண்டும் என்று அரசர் காகம் கேட்டது. 

உடனே அந்த முதிய காரணமானது மன்னா நீதி நெறிப்படி அமைச்சர்கள் கூறிய அனைத்து அபிப்பிராயமும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் நமக்கு எது நல்லது என்று நினைக்கிறேன் என்றால் நயவஞ்சகம் புரிவதுதான் சரியாக இருக்கும் என்று கூறியது. தந்திரத்தால் நம்மால் நம்மை விட எதிரியை கூட சுலபமாக விட்டு விடலாம் என்று கூறியது. நீங்கள் அவர்களது பலவீனம் என்ன என்று அறிந்து கொண்டு சமயம் பார்த்து ஆந்தைகளை கொன்று விடுங்கள் என்று கூறியது. 

உடனே அரசர் காகம் ஆனது புதிய காகத்தை பார்த்து ஆந்தைகளின் தலைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு தெரியாதே என்று அவரிடம் கேட்டது. 

புத்திசாலித்தனமாக நீங்கள் போய் தினமும் கண்காணித்துக் கொண்டே இருந்தால் அவர்களை கண்டுபிடித்து விடலாம் என்று வயதான காகம் கூறியது. 

அரசருக்காக மனது சிறிது நேரம் கழித்து காக்கைகளுக்கும் குழந்தைகளுக்கும் பகை உண்டாக என்ன காரணமாக இருக்கும் என்று கேட்டது. 

அதற்கு அந்த வயதான காகமானது நான் உண்மை கதை என்னவென்று கூறுகிறேன் என்று சொல்லத் தொடங்கியது. 

இந்த கதையை நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் வலைதள பக்கத்தை தொடருங்கள்....

Comments


EmoticonEmoticon